/

முஸ்லிம் மக்களே எனக்கு வாக்களியுங்கள்.. இல்லையென்றால்: மிரட்டும் அரசியல்வாதி

மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல் நாளே அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 12:21 pm

லக்னௌ: மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல் நாளே அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்றால்.. முஸ்லிம் மக்களே நீங்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.

துரப் கனி கிராமத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய மேனகா காந்தி, எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மாட்டேன் என்றும் அவர் நேரடியாகவே முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.

வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்கும் முஸ்லிம் மக்களிடம் நான் சொல்வது இதுதான். ஒரு பக்கம் கொடுத்து, மறுபக்கம் எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தம். இதில் வேலைதான் டீல் என்கிறார் மேனகா காந்தி.

நான் உங்கள் ஆதரவு இல்லாமலேயே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வந்து, உங்களுக்காக பணி செய்து கொண்டே இருக்க முடியாது. நான் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் நான் தேவைப்படுகிறேன். இது உங்களுக்கான வாய்ப்பு, எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.