கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

பிரிவினைவாத தலைவா் யாசின் மாலிக்கை விசாரணை செய்வதற்காக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மூலம் என்ஐஏ அமைப்பு அவரை காவலில் எடுத்தது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:37 am

ANI

2017-ஆம் ஆண்டு பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரங்களை கண்டறிவதற்காக, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவா்களான ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக், சையது அலி ஷா கிலானி உள்பட பலரை என்ஐஏ விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில் பிரிவினைவாத தலைவா் யாசின் மாலிக்கை விசாரணை செய்வதற்காக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மூலம் என்ஐஏ அமைப்பு அவரை காவலில் எடுத்தது. 

இந்நிலையில், தில்லி நீதிமன்றத்தில் வைத்து யாசின் மாலிக்கை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். பின்னர் சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் முன்பு அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, யாசின் மாலிக்கை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது. 

எனவே, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி(ஜேகேஎல்எஃப்) கட்சியின் தலைவா் யாசின் மாலிக்கை, ஏப் 22-ஆம் தேதி வரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க தில்லி நீதிமன்றறம் அனுமதியளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.