எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கேரள வெள்ளத்துக்கு மாநில அரசே காரணம்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாநில அரசின் மோசமான அணை பராமரிப்பே காரணம் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சட்ட வல்லுநர் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:33 am

ENS


2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாநில அரசின் மோசமான அணை பராமரிப்பே காரணம் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சட்ட வல்லுநர் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

2018-இல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 470 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த வெள்ளம் குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் சட்ட வல்லுநரை நியமித்தது. அவர் 47 பக்க ஆய்வறிக்கையை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார்.

அதில், அணை திறப்பின் போது எந்தவித நடைமுறையும் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. கேரள அரசு, கேரள மின்சார வாரியம் தாக்கல் செய்த அறிக்கைகள் அணை பராமரிப்பு குறித்து எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. குறிப்பாக மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றவில்லை. கேரளாவில் உள்ள 70 அணைகளும் வெள்ளம் தடுப்பு நோக்கத்துக்காக பயன்படுத்தப்படவில்லை. அதிக அளவு நீர்த்தேக்கம் மற்றும் அதை திடீரென வெளியேற்றியதே இந்த மோசமான வெள்ளத்துக்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கூடுதல் விசாரணைக்கு முன்னாள் நீதிபதி தலைமையில் சுயாதீன வல்லுநர் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையில், நீர் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் அணை பராமரிப்பு வல்லுநர்கள் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.