மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆதார் அட்டையால் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சம்: அருண் ஜேட்லி

ஆதார் எண் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 12:17 pm


புது தில்லி: ஆதார் எண் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதார் எண்ணால் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் உரிய நபர்களை நேரடியாகச் சென்றடைவதோடு அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் எண் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைக் கையாள வகை செய்யும் சட்டப்பிரிவையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனி நபர் அடையாள அட்டை எனும் திட்டம் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கப்படும் வகையிலும் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது இருக்கும் 122 கோடி மக்களில், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவோரில் போலியான நபர்களின் பெயரிலோ, பொய்யான தகவல்களைக் கொண்டோ, இல்லாத நபர்களுக்கோ சேவை சென்றடையாது என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.90 ஆயிரம் கோடி பணம் மிச்சமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.