மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரஃபேல்: திருடியவர்களிடம் இருந்து நியாயம் பெற்றுத் தருவோம் - ராகுல் உறுதி

ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் ஏழை மக்களிடம் திருடிய பணத்தை பிரதமர்  மோடி தனது நண்பர் அனில் அம்பானியில் பையில் போட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 10:36 am


புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் ஏழை மக்களிடம் திருடிய பணத்தை பிரதமர்  மோடி தனது நண்பர் அனில் அம்பானியில் பையில் போட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தனது கருத்துகளை டிவிட்டர் மூலம் பதிவு செய்து வரும் ராகுல், தெரிவித்திருப்பதாவது, இந்தியாவுக்காக பணியாற்றிய அனைத்து விமானப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், விமானப் படை விமானிகளை இழந்த குடும்பத்தினர், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அனைவரின் வலிகளையும் நாங்கள் உணர்கிறோம்.
உங்களது உணர்வுகளை நாங்கள் அறிகிறோம்.
உங்களை அவமரியாதை செய்து, உங்களிடம் இருந்து திருடியவர்களிடம் இருந்து நியாயத்தை நிச்சயம் பெற்றுத் தருவோம் என்று டிவீட் செய்துள்ளார்.

முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏழை மற்றும் விமானப் படையிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்து, பிரதமர்  மோடி தனது நம்பிக்கைக்குரிய நண்பர் பாக்கெட்டில் போட்டுள்ளார் என்று ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.

நேற்று ரஃபேல் ஒப்பந்தம் குறித்துப் பேசிய ராகுல், பிரதமர் மோடி ஏழை மக்களிடம் திருடிய பணத்தை தொழிலதிபர் அனில் அம்பானிக்குக் கொடுத்துள்ளார்.

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

ஏழை, விமானப் படையில் பணியாற்றி வீர மரணம் அடைந்த வீரர்கள் மற்றும் பணியாற்றும் வீரர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து அனில்  அம்பானியின் பாக்கெட்டில்  போட்டுள்ளார்.

விமானக் கட்டுமானத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்துக்கு 70 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஆனால் அனில் அம்பானிக்கு 10 நாட்கள் கூட அனுபவம் இல்லை. ஆனால் விஜய் மல்லையா போன்று அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.