மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை 

பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மீதமுள்ள 8 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம்.. 

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 10:32 am

புது தில்லி: பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மீதமுள்ள 8 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் அதிகரித்து வந்த நிலையில், இதை தடுப்பதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. 

இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி பசுக்களை கடத்திச் செல்வதாக சந்தேகிக்கப்பட்டு ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிகையாளர் துஷார் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் தெசீன் பூனாவலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ள  எட்டு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகளில் ஈடுபடுவர்கள் சட்டத்தின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதை அவர்கள் உணர்நது கொள்ள வேண்டும். 

இவ்வாறு தெரிவித்த நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் தெசீன் பூனாவலாவின் மனுவினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.