புது தில்லி: கடந்த வாரம் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக அறிவித்த மத்திய அரசு, தற்போது மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
மண்டல கிராம வங்கிகள் என்பவை ஆர்ஆர்பி சட்டம் 1976-ன் கீழ் சிறுவிவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் கிராமப்புற கலைஞர்களுக்கு கடன் அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தில், இந்த வங்கிகள் தங்களது மூலதனத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
தற்போது நாட்டிலுள்ள மண்டல கிராம வங்கிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை ஸ்பான்ஸர் வங்கிகளும், 15 சதவீதம் மாநில அரசும் வைத்துள்ளன. தற்போது நாடு முழுவதும் 56 மண்டல கிராம வங்கிகள் உள்ளன.
இந்நிலையில் தற்போதுள்ள மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலஅரசுகளின் உதவியுடன் மண்டல கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதியுதவியில் செயல்பட்டு வரும் வங்கிகள், வங்கிகளை இணைப்பதற்கான செயல் திட்டத்தை மாநிலத்துக்குள்ளே தொடங்கி விட்டன
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த இணைப்பின் மூலம் வங்கிகளின் கடன்கொடுக்கும் தகுதி அதிகரிக்கும். மக்களுக்கு சேவைகளை விரைவாக அளிக்க முடியும், மேலும், தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி, செலவுகளைக் குறைக்கவும், மூலதனத்தை அதிகப்படுத்தவுமே அரசு இதனைத் திட்மிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த வங்கிகள் இணைப்புக்குப் பின்பும் அரசிடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும்.
மண்டல கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு வரும் செயல்பாடானது கடந்த 2005-ம் ஆண்டு முதலே படிப்படியாகத் துவங்கி விட்டது. கடந்த 2005-ம் ஆண்டு 196 வங்கிகள் இருந்த நிலையில் 2006-ல் இது 136ஆகக் குறைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டுக்குள் 82ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 56 வங்கிகள் 36ஆகக் குறைக்கப்பட உள்ளதாக தகவல வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வருங்கால ஊடக உலகம்

விண்வெளி மாயம் 1000

எரிக் ஹாப்ஸ்பாம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


