மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஒடிசாவின் ஜார்சுகுடா விமான நிலையத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்கள் நிறைந்த ஜார்சுகுடா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2018, 11:51 am


ஜார்சுகுடா: ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்கள் நிறைந்த ஜார்சுகுடா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

ஒடிசா மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கும், நாகரீக வளர்ச்சிக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைந்திருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

ஒடிசாவில் இதுவரை ஒரே ஒரு பெரிய விமான நிலையம் மட்டுமே அமைந்திருந்தது. அதே சமயம், குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 5 விமான நிலையங்கள் இருப்பதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

கனிம வளங்கள் நிறைந்த இப்பகுதியில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏராளமான முதலீட்டாளர்கள் இப்பகுதிக்கு வந்தடைய முடியும் என்றும், நாட்டின் கிழக்கு மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாமை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை சமநிலைப்படுத்த முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


மீண்டும் வருவேன்: ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் தல்சேர் உரத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் உரத் தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டதும் மீண்டும் வந்து ஆலையைத் திறந்து வைப்பேன் என்று கூறினார்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவேன் என்பதை சூசகமாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்க அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.