தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: ராகுல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் செவ்வாய்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:48 pm

ENS

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் செவ்வாய்கிழமை தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் ராகுல், தற்போது முதன்முறையாக ஆந்திர மாநிலத்தில் செவ்வாய்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கர்னூல் மாவட்டத்தில் மாணவர்களிடையே உரையாடிய ராகுல் பேசுகையில்,

ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பதை மத்திய அரசு ஏதோ சேவை செய்வது போன்று நினைக்கிறது. ஆனால் அது மத்திய அரசின் கடமை. சிறப்பு அந்தஸ்து என்பது ஆந்திர மக்களின் உரிமை. எனவே இது உங்களுக்குச் சொந்தமானது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதுதான் முதல் பணி. ஆந்திர மக்களின் உரிமையை அவர்களுக்கு பரிசளிப்பதுதான் எங்கள் நோக்கம். 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பும் ஆகும். எனவே அது மக்களுக்காக 100 சதவீதம் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புணர்வாகும். ஆனால் மக்களின் மதிப்பு குறித்து தற்போதைய பிரதமருக்கு சரியாகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தவுடன் நிச்சயமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.