தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கேரளாவில் கனமழையும், பெரு வெள்ளத்தாலும் கூட சாதிக்க முடியாமல் போன ஒரு விஷயம்!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால ஏற்பட்ட வெள்ளம் அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 1924ம் ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு மழை, வெள்ளத்தை அம்மாநிலம் கண்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:46 pm

ENS


கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால ஏற்பட்ட வெள்ளம் அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 1924ம் ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு மழை, வெள்ளத்தை அம்மாநிலம் கண்டுள்ளது.

வெள்ளத்தால் சுமார் 500 பேர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இன்னும் சில ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில்தான் தங்கியுள்ளனர்.

கேரளாவில் பெய்த கன மழை காரணமாக அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டும் அல்ல, மீண்டும் அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இது எதுவுமே கேரளாவில் மதுபான விற்பனையைப் பாதிக்கவில்லை என்பதே அதிர்ச்சி தரும் தகவலாக தற்போது நம்மை வந்தடைந்துள்ளது.

அதாவது, கேரள மாநில மதுபான கழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாத மது விற்பனை (அதாவது மழை கோரத்தாண்டவம் ஆடிய மாதம்) அதற்கு முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் குறையவில்லை என்றும் சற்று அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமல்லாமல், கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிட்டாலும் மது விற்பனை எந்த வகையிலும் குறையவில்லை என்றே புள்ளி விவரங்கள் சாட்சி சொல்கின்றன.

கன மழை, வெள்ளம் சூழ்ந்த நிலையிலும் மதுபான விற்பனை அதிகரித்தது எப்படி என்று முக்கிய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அதில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை அதிகமாக இருந்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உண்மையிலேயே வெள்ளம் பாதித்திருந்த ஆகஸ்ட் 15 முதல் 19ம் தேதி வரை மதுபான விற்பனை மிகவும் குறைவாகவே இருந்ததாகவும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுவாக மதுபான விற்பனை அதிகமாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு உயரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.