அதாவது, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அமைந்திருக்கும் கிராமத்துக்குள் இந்திய ராணுவத்தினர் நுழையும் போது அங்கே இருக்கும் நாய்கள் குரைத்து மக்களை எழுப்பிவிட வாய்ப்பு அதிகம். அதே சமயம் நாய்களுக்கு சிறுத்தைகள் என்றால் பயம் என்று அறிந்திருக்கிறோம். எனவே, ஜர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் சிறுத்தையின் சிறுநீரையும் எடுத்துச் சென்றார்கள். அந்த வாசனையால், நாய்கள் ராணுவ வீரர்கள் பக்கமே வரவில்லை. சிறுத்தை என அஞ்சி அது அது இருந்த இடத்திலேயே பதுங்கிக் கொண்டது என்று ராணுவ அதிகாரி நிம்போர்கர் தெரிவித்தார்.