பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை  

உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிராக அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :9 அக்டோபர் 2018, 9:45 am

லக்னௌ: உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிராக அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ரீடா பகுகுண ஜோஷி. முன்பு காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போது,  தடையை மீறி லக்னௌவில் பொதுக் கூட்டம் நடத்தியதுடன், பின்னர் சட்டசபையை நோக்கி பேரணியும் நடத்தினார். இதன் காரணமாக காவல்துறையினருடன் தகராறு ஏற்பட்டது. 

அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவருக்கு  அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. வரும் 31-ஆம் தேதியன்று  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.   

நாடெங்கும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குக்களை  விசாரிக்க என்று தனியாக மத்திய அரசு 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை  உருவாகியுள்ளது. அவற்றில் அலஹாபாத் சிறப்பு நீதிமன்றமம் ஒன்று. 

ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிரான கிரிமினல் வழக்கு  தொடர்ந்து அங்கு நடைபெற்று வந்த நிலையில், பலமுறை ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், அவர் ஆஜராகாத  காரணத்தினால், தற்போது அவருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.