கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்: ஷரத் யாதவ் காட்டம் 

வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரத்தில் குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் நிறுவனர் ஷரத் யாதவ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:01 pm

IANS

புது தில்லி: வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரத்தில் குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் நிறுவனர் ஷரத் யாதவ் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சபர்கந்தா மாவட்டத்தில் சிறுமி ஒருவரை, பிகாரைச் சேர்ந்தவர் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வெளி மாநிலத்தவரை மோசமாக சித்திரித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஆயிரக் கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரத்தில் குஜராத் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் நிறுவனர்   ஷரத் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிவ் கூறியுள்ளதாவது:

நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பிற மாநில மக்களுக்கு குறிப்பாக ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க குஜராத் அரசு தவறி விட்டது. எனவே இந்த அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்.

இந்த மக்கள் கடந்த பல் வருடங்களாக குஜராத் மாநிலத்திற்கு தங்கள் சேவைகளை வழங்கி வந்திருக்கின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது.  ஆனாலும் தொழிலாளர்களை பாதுகாக்க முடியவில்லை. 

தற்போது நிகழ்ந்துள்ள இந்த தொழிலாளார்கள் வெளியேற்றமானது பாஜக அரசு என்பது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது அல்ல என்பதைக் காட்டுகிறது. இது நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.