மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே: அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு இரு மடங்கு சம்பளம்!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு அவர்களது வங்கி சம்பள கணக்கில் இரு மடங்காக சம்பளம் போடப்பட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2018, 8:56 am


அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு அவர்களது வங்கி சம்பள கணக்கில் இரு மடங்காக சம்பளம் போடப்பட்டுள்ளது. இதனை அரசு தீபாவளி பரிசாக வழங்கி இருக்கலாம் என நினைத்து பல அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளனர் என பல ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களின் தலைவர்களுக்கும் மாவட்ட அரசு கருவூல அதிகாரி ஏ.கே.மைனி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு கருவூலத் துறையின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக இரு மடங்காக சம்பளம் வழங்கப்பட்டுவிட்டன, விரைவில் அரசு கருவூலம் மூலமாக ஒரு சம்பளம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் எனவும், குறிப்பாக கல்வித்துறை சார்ந்தவர்கள் இரட்டிப்பு சம்பள தொகையை (2வது சம்பளம்) எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமிர்தசரஸ் மாவட்டத்தில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளமாக ரூ.40 முதல் 50 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை தொடர்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.