புது தில்லி: போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 2005ம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சிபிஐ செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பது குறித்து பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய சிபிஐ எடுத்துக் கொண்ட கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 1986ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது போஃபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


