தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெட்ரோல், டீசல் விலை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: ராஜ்நாத் சிங்

பெட்ரோல், டீசல் விலை விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

Raghavendran

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு ஏற்பட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 81.35 மற்றும் டீசல் ரூ. 73.12 விற்கப்படுகிறது.

தினமும் உயர்வை கண்ட பெட்ரோல், டீசல் விலையில் 16 நாட்களுக்குப் பின்னர் புதன்கிழமை 1 பைசா குறைக்கப்பட்டது. இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை விரைவில் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

மக்கள் அவதிப்படாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை விரைவில் கட்டுப்படுத்தி, குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.