மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடன் நாளை ஆலோசனை: குமாரசாமி அறிவிப்பு

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:10 pm

Raghavendran

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராகப் பதவியேற்ற பாஜக தலைவர் எடியூரப்பா, விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல் கையெழுத்திட்டார். பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கட்சித் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். அப்போது 24 மணிநேரங்களுக்குள்ளாக கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படும் என்றார். 

மேலும் தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டுள்ளதாகவும், கர்நாடக மக்களுக்கு அல்ல என்று பேட்டியளித்தார். இதனிடையே விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக எடியூரப்பா கேள்வி எழுப்பினார். அதுபோல மாநிலம் தழுவிய அளவில் பாஜக போராட்டம் நடத்தியது. 

அதுபோல பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி தெரிவித்ததாவது:

பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று உறுதியளித்தேன். ஆனால் தற்போது நான் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளேன். எனவே எனக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது. அவ்வாறு நான் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தே வெளியேறுகிறேன் என்றார்.

இந்நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான வழிகாட்டுதல்களை புதன்கிழமை வெளியிடுவதுடன், கர்நாடக சட்டப் பேரவை வளாகத்தில் காலை 11 மணியளவில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.