ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு: 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :16 மே 2018, 9:49 am


பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இருந்து முறைகேடாக கடன் உறுதிச் சான்றிதழ்கள், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை பெற்று வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் ரூ.13,492 கோடியை நீரவ் மோடியும், அவரது உறவினர்களும் கடனாகப் பெற்றனர். அதனை திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

அந்த வழக்கில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, நீரவ் மோடி நிறுவனத்தின் அதிகாரி துபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

முன்னதாக, கடந்த நிதியாண்டின் (2017-18) நான்காவது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த கடன் உறுதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் இருந்து நீரவ் மோடி பெற்ற கடன் தொகைக்கான முதல் தவணை ரூ.6,586 கோடியை செலுத்திவிட்டோம்.

அடுத்த தவணைத் தொகை ரூ.6,959 கோடியை செலுத்திவிடுவோம். நீரவ் மோடி வாங்கிய கடன்தொகைக்கு வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டால் இன்றைய நிலையில் ரூ.14,356 கோடியாக உள்ளது. அதில், முதல் தவணை ரூ.7,178 கோடியை திரட்டிவிட்டோம். அடுத்த 3 காலாண்டுகளுக்குள் எஞ்சியுள்ள ரூ.7,178 கோடியை திரட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.