கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

லாலு பிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: மகன் தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

லாலு பிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:33 pm

Raghavendran

ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ.900 கோடி ஊழல் புரிந்ததாக லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

கால்நடைத் தீவன ஊழல் முதலாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2-ஆவது வழக்கில் மூன்றரை ஆண்டுகளும், 3-ஆவது வழக்கில் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டன. 

இந்நிலையில், 4-ஆவது வழக்கிலும் 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் யாதவுக்கு இதுவரை 27.5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

4 வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கு தகுந்த மாதிரி எங்கள் செயல்திட்டங்கள் அமையும். அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் திட்டமிட்டு லாலு பிரசாத் யாதவை பழிவாங்கியுள்ளது. இதில் லாலு பிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.