ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குரங்கணி காட்டுத் தீ குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லையா? மறுக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

குரங்கணி காட்டுத் தீ குறித்து மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த எச்சரிக்கை செய்தியும் வரவில்லை என்று ஊடகங்கள் கூறியிருக்கும் நிலையில், மத்திய அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2018, 7:25 am


புது தில்லி: குரங்கணி காட்டுத் தீ குறித்து மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த எச்சரிக்கை செய்தியும் வரவில்லை என்று ஊடகங்கள் கூறியிருக்கும் நிலையில், மத்திய அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் காட்டுத் தீ பற்றிய எச்சரிக்கை செய்தி எதுவும் மாநில வனத்துறைக்கு கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனை மறுத்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம்  மற்றும் சிறப்பு செயலர் சித்தாந்த தாஸ் கூறுகையில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்ட எச்சரிக்கை செய்தி மாநில அரசுக்கு சரியாக சென்றடைந்ததா என்பதை என்னால் உறுதி செய்ய முடியாது. எங்கிருந்து எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டதோ அந்த துறை அதிகாரிகளை கேட்டறிந்த பிறகே அது பற்றி கூற முடியும் என்றார்.

குரங்கணி காட்டுத் தீயில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இது பற்றி கூறுகையில், காட்டுத் தீ குறித்து தமிழ்நாடு வனத்துறையின் அதிகாரிகளுக்கு மார்ச் 11ம் தேதி மதியம் 2.29 மணிக்கும், 3.37 மணிக்கும் இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. 

அதாவது, எம்ஓடிஐஎஸ் மற்றும் எஸ்என்பிபி ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம் கிடைத்த தகவல்களை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்ஸிங் மையத்தில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றதும் அது குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவலை அனுப்பினோம்.

வழக்கமாக காட்டுத் தீ குறித்து அந்தந்த மாநிலங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை அனுப்புவது வழக்கம்.

இது ஒரு தானியங்கி நடவடிக்கையாகும். இரவு நேரத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்தும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படும். அதுபோலத்தான் மார்ச் 11ம் தேதியும் 2 மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்கிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.