தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிகமான ஆர்டிஐ விண்ணப்பங்களை பதில் சொல்லாமல் நிராகரித்தத் துறை இதுதான்!

பணமதிப்பிழக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-17ம் ஆண்டில் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்ததாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2018, 5:58 am


புது தில்லி: பணமதிப்பிழக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-17ம் ஆண்டில் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்ததாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்தியத் துறைகளின் பட்டியலை மத்திய தகவல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு 2016-17ம் நிதியாண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 1,51,186  விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், அதில் 27,833 விண்ணப்பங்களை அமைச்சகம் நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிரதமர் அலுவலகம் ஆகியவை தங்களுக்கு வந்த விண்ணப்பங்களில் 10 சதவீதம் அளவு விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன.

அதே போல, அடிப்படைக் காரணம் இல்லாமல் விண்ணப்பங்களை நிராகரிப்பது மற்றும் காரணம் இல்லாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களுக்காக ரூ.18.97 லட்சம் அளவுக்கு மத்திய தகவல் ஆணையம் மத்திய அமைச்சகங்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.