நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

துண்டிக்கப்பட்ட காலை நோயாளிக்கு தலையணையாக்கிய மருத்துவமனை: மருத்துவர்கள் மீது நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்ஸி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:27 pm

PTI


புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்ஸி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஜான்சி அரசு மருத்துவமனையில், ஒரு இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை அவருக்கு தலையணையாக வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு செய்தி பறந்தது.

உடனடியாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், சம்பவத்தின் போது பணியில் இருந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தும், 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது என்னவென்றால், 28 வயதான ஞானஷ்யாம் என்ற இளைஞர் மிக மோசமான பேருந்து விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. அவரது உயிரைக் காப்பாற்ற காலை வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபோது, வெட்டி எடுத்த காலை தலையணையாக வைத்திருந்தனர்.

இதனைப் பார்த்த உறவினர்கள், ஊழியர்களிடம் பல முறை தலையணை தருமாறு கோரியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அருகில் உள்ள கடைக்குச் சென்று தலையணை வாங்கி வந்து வைத்துள்ளனர்.

முன்னதாக காலை தலையணையாக வைத்திருந்த புகைப்படத்தை பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ததால் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.