நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்க உத்தரவு

ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:27 pm

PTI


புது தில்லி: ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டால், சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த கோரிக்கையை விசாரித்த பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், சிறை விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், சிறை மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் சிறையில் இருக்கும் போது வெளியில் இருந்து உணவு வழங்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் முன்பு கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் விதித்த நீதிமன்றம், அவரை மார்ச் 24ம் தேதி வரை திகார் சிறையிலடைக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், 12 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.