பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சர்வதேச மகளிர் தினத்தினை தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் எப்படிக் கொண்டாடப் போகுது தெரியுமா? 

சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 12:00 pm

புதுதில்லி: சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை சிறப்பிக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையமானது ஒரு முயற்சி எடுத்துள்ளது.

அதன்படி அன்று ஒரு நாள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள ஏதேனும் ஒரு சுங்கச் சாவடியிலாவது இந்த திட்டமானது வரும் 8-ஆம் தேதியன்று செயல்படுத்தப்படும்.  தேர்ந்தெடுக்கப்படும் சாவடிகளில் அன்று பெண் ஊழியர்கள் பகல் நேரப் பணியில் மட்டும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த முன்முயற்சியானது வெற்றியடைந்தால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லா சுங்கச் சாவடிகளிலும் மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும்.

இது தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.