பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல: பிரதமர் மோடி 

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல என்று தில்லியில் நடந்த இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 8:16 am

புதுதில்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல என்று தில்லியில் நடந்த இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா வருகை தந்துள்ளார். இந்நிலையில் வியாழனன்று தில்லியில் "இஸ்லாமிய பாரம்பரியம்: புரிந்துணர்வை வளர்த்தலும், நவீன மயமும்"  என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா இருவரும் பங்கேற்றனர். அப்பொழுது மோடி பேசியதாவது:

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல; இளைஞர்களைத் தவறாக வழி நடத்தும் மனநிலைக்கு எதிரானது மட்டுமே.

உலகத்தின் எல்லா பெரிய மதங்களுக்கும் இந்தியா தொட்டிலாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் என்பது நமது பழமையான பன்முகத்தனமையின் கொண்டாட்டம்தான்.   

எல்லா மதங்களுமே மனித மாண்புகளை வளர்க்கின்றன. அந்த வகையில் இஸ்லாமில் உள்ள நல்ல மாண்புகளோடு இளைஞர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நவீனத்தினை அதனோடு  இணைப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜோர்டான் மன்னர் அப்துல்லா பேசியதாவது:

நம்பிக்கையே மனித இனத்தை ஒன்றிணைக்கும்.அதுவே நம்மை நலமுடன் வாழ வைக்கும். எனவே வெறுப்பை பரப்பும் குரல்களை மக்கள் ஒதுக்க வேண்டும். கலவரங்களுக்கு எதிரான வலிமையான தடுப்பு என்பது ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.

இவ்வாறு மன்னர் அப்துல்லா தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.