பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அதிசயமே அசந்து போகும் செர்ரி: தெற்காசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை

ஆசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை என்று அழைக்கப்படும் செர்ரி என்ற பெண் குழந்தை, பிறந்து சுமார் 128 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2018, 7:58 am

ஹைதராபாத்: ஆசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை என்று அழைக்கப்படும் செர்ரி என்ற பெண் குழந்தை, பிறந்து சுமார் 128 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஹைதராபாத்தின் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. வெறும் 25 வாரக் கருவாக இருந்த நிலையில், செர்ரியின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தைப்பேறு ஏற்பட்டது. குழந்தை பிறந்த போது உடல் எடை வெறும் 375 கிராம் மட்டுமே இருந்தது.

இவ்வளவு எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது அதிசயம் என்பதால், இந்த குழந்தை அதிசயக் குழந்தை என்றும், தெற்காசியாவின் மிகச் சிறிய குழந்தை என்றும் அழைக்கப்பட்டார்.

சட்டீஸ்கரைச் சேர்ந்த சௌரவ் - நிதிகா தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 முறை கருக்கலைப்பு நேரிட்டு 5வது முறையாக குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவமனையில் செர்ரி என்று பெயரிட்டார்கள்.

குழந்தை பிறந்த போது, மஞ்சள் காமாளை, பால் குடிப்பதில் சிக்கல், நுரையீரல் போதிய வளர்ச்சி அடையாதது போன்ற பல பிரச்னைகள் செர்ரிக்கு இருந்தது.

தெற்காசியாவின் மிகச் சிறிய குழந்தை என்று பெயர் பெற்ற செர்ரியின் உடல்நலனை மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது. வென்டிலேட்டரில் சுமார் 105 நாட்கள் செர்ரி வைக்கப்பட்டிருந்தாள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நன்கு உடல் எடை தேறி தற்போது அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது உடல் எடை 1.980 கிலோ கிராம்.

பல குறைபாடுகளுடன் பிறந்த செர்ரிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். அதன் பயனாக அவரது உடல் எடை நன்கு தேறி வந்தது. 120வது நாளுக்குப் பிறகு அவர் எந்த கருவியின் உதவியும் இன்றி சுவாசிக்க முடியும் என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். 

குழந்தை பிறந்த போது வெறும் 375 கிராமும், 20 செ.மீ. மட்டுமே இருந்தது. ஒருவரின் உள்ளங்கை அளவுக்குத்தான் செர்ரி இருந்தாள். பொதுவாக குழந்தைகள் 2.7 கிலோ முதல் 3.5 கிலோ வரை எடையுடன் இருப்பது வழக்கம் என்றார்கள் செர்ரியை தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.