மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

நாடு முன்னேற அனைவரின் பங்களிப்பும் முக்கியம்: குடியரசுத் தலைவர் உரை

நாட்டின் வளர்ச்சி, பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை இடம்பெற்றிருந்தது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:04 pm

Raghavendran

நாடு முழுவதும் 69-ஆவது குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குடியரசுத் தலைவர் உரை கருதப்படுகிறது. அவ்வகையில் 69-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை பேசினார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் தற்போது முதன்முறையாக குடியரசு தின உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:

ராணுவ வீரர்கள், விவசாயிகள், நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்கள், நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.

நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், வளப்படுத்தும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தின் தூண்களாக நாட்டு மக்கள் திகழ்கிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருவது பெருமை அளிக்கிறது.  

எத்தனை தடைகள் வந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பை உருவாக்கி முக்கியத்துவம் அளிப்பபோம். பெண் குழந்தைகளுக்காக அனைத்திலும் சம உரிமை கிடைக்க தொடர்ந்து குரல் எழுப்பி சமுதாயத்தில் சமநிலையை ஏற்படுத்துவோம். 

அண்டை நாடுகளுடன் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம். மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு எதிராக போராடவும், அதனை அகற்றவும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தைகள் தான் வலிமையான இந்தியாவின் எதிர்காலம் என்பதை உணர வேண்டும். அவர்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். 

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு குடும்பங்கள், சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.