பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ரயில் தண்டவாளத்தில் சாகசம் செய்த காஷ்மீர் இளைஞர்களுக்கு காவல்துறை அறிவுரை

நெஞ்சை பதற வைக்கும் வகையில், தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு காஷ்மீர் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2018, 12:49 pm

ஸ்ரீநகர்: நெஞ்சை பதற வைக்கும் வகையில், தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு காஷ்மீர் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அடில் மக்பூல் என்ற இளைஞர், தண்டவாளங்களுக்கு இடையே படுத்துக் கொள்ள, அவர் மீது அதிவேகமாக வந்த ரயில் கடந்து சென்றது. பிறகு எழுந்து நின்று சிரித்தபடி போஸ் கொடுக்க, இதனை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து காஷ்மீர் காவல்துறையினர் இவர்களை கைது செய்தது.

இவர்கள் செய்த மோசமான செயல் குறித்து காவல்நிலையத்தில் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது வழக்குத் தொடராமல், அறிவுரை கூறி அனுப்பிய காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அடில் மக்பூப் கூறினார்.

சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவிய இந்த விடியோவைப் பார்த்த பொதுமக்கள் பலரும், தவறான முன்னுதாரணமாக இருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.