பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:59 am

PTI


பூஞ்ச்: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி வருகிறது. அந்நாட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்திய ராணுவம் இன்று தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் இந்திய ராணுவம் தயார் நிலையிலேயே உள்ளது. பாகிஸ்தானில் அத்துமீறல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.