பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மும்பை மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன்: ஏன் தெரியுமா?

இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் என மும்பை மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2018, 10:30 am

மும்பை: இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் என மும்பை மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ரயில்வே நிலையங்களில் மும்பையின் மாதுங்காவும் ஒன்று. மத்திய ரயில்வேயின் பொது மேலாளரான ஷர்மாவின் முன் முயற்சியின் காரணமாக,கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ரயில் நிலையமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது.

ரயில் நிலைய பாதுகாப்பில் ஈடுபடும் ரயில்வே  பாதுகாப்பு படையினரில் துவங்கி, வணிக ரீதியிலான அலுவல்கள் மற்றும் நிலையச்  செயல்பாடுகள் என அனைத்திலும் முழுக்க மகளிரே ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 41 பெண்கள் இந்த ரயில் நிலையத்தை நிர்வகித்து வருகின்றனர்.

தற்பொழுது இந்த ரயில் நிலையமானது இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் என லிம்கா சாதனைப் புத்தகத்தில் 2018-ஆம் ஆண்டுப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தகவலை மத்திய ரயில்வே துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிட பகிர்ந்து கொண்டார். இந்த முடிவானது மகளிர் மேபாடு மற்றும் முடிவெடுக்கும் திறனில் அவர்களது தனித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.