பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா: ராஜஸ்தான் கல்வி அமைச்சர் 'கண்டுபிடிப்பு'!

நியூட்டனுக்கு முன்பாக புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்

News image
Updated On :9 ஜனவரி 2018, 9:44 am

ஜெய்ப்பூர்:  நியூட்டனுக்கு முன்பாக புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி  திங்களன்று ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:

புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது சர் ஐசக் நியூட்டன் என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம். ஆனால் ஆழமாகப் பார்த்தோமானால் நியூட்டனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் பிரம்மகுப்தா (இரண்டாம்) புவியீர்ப்பு விசை பற்றிய கொள்கையினை வெளியிட்டுள்ளார். நான் ஏன் இதனை நமது பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாசுதேவ் தேவ்னானி ஒன்றும் சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. கடந்த ஆண்டு இவர் உலகிலேயே பசு ஒன்றுதான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.