பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹஜ் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடை: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு! 

ஹஜ் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடை என்ற மத்திய அரசின் புதிய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2018, 8:09 am

புதுதில்லி: ஹஜ் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடை என்ற மத்திய அரசின் புதிய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் கணிசமான இஸ்லாமிய மக்கள் தங்கள் மதக் கடமையினை நிறைவேற்ற ஹஜ் புனிதப் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கான 'தகுதி' தொடர்பான வழிகாட்டுதல்களில், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாது என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து கவுரவ் பன்சால் என்ற வழக்கறிஞர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில் மத்திய அரசின் இந்த உத்தரவானது அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 21 மற்றும் 25 வழங்கியுள்ள மத சமத்துவம் தொடர்பான உரிமைகளுக்கு எதிராக அமைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்    

இந்நிலையில் இந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை,மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாடு & ஹஜ் துறை அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தெரிவித்த நீதிமன்றம், வழக்கினை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றே பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.