பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

நாடு முழுவதும் 3 கோடி போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க உதவிய ஆதார்: மத்திய அரசு

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த சுமார் 3 கோடி ரேஷன் அட்டைகளை ஒழிக்க ஆதார் அட்டைதான் உதவியது என்று மத்திய நுகர்வோர் நலன் துறை இணை அமைச்சர் சி.ஆர். சௌதாரி கூறியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:20 pm

PTI


ஹைதராபாத்: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த சுமார் 3 கோடி ரேஷன் அட்டைகளை ஒழிக்க ஆதார் அட்டைதான் உதவியது என்று மத்திய நுகர்வோர் நலன் துறை இணை அமைச்சர் சி.ஆர். சௌதாரி கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த போலி அட்டைகளுக்காக செலவிடப்பட்டு வந்த ரூ.17 ஆயிரம் கோடி ரூபாயும் இந்த நடவடிக்கையால் சேமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்ததால், இந்த நன்மைகள் கிடைத்ததாகவும், நாட்டில் மொத்தமுள்ள 23 கோடி ரேஷன் அட்டையில் 82 சதவீத அட்டைகள் அதாவது 19 கோடி அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆதார் அட்டை மூலமாக, மானிய விலையில் கிடைக்கும் உணவு பொருட்கள் சரியான நபர்களுக்கு மட்டும் சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.