தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முத்தம் கொடுக்க அனுமதியும், விழாவும் எதற்கு? துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு

முத்தம் கொடுக்க அனுமதியும், முத்த விழாவும் எதற்கு என்று துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:17 pm

Raghavendran

ஆர்.ஏ.பொட்டர் வர்த்தகக் கல்லூரி தனது பவள விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அதனை சிறப்பிக்கும் விதமாக துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நமது நாடாளுமன்றத்தை தாக்கிய முகமது அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் போராட்டங்களை நடத்தினர். இதனிடையே பிப்ரவரி 9, 2013-ல் தில்லி திகார் சிறையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதுபோல தற்போது மாட்டிறைச்சி மற்றும் முத்தம் ஆகியவற்றுக்கு விழா கொண்டாடி வருகின்றனர். உங்களுக்கு மாட்டிறைச்சி வேண்டுமென்றால் அதை நீங்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதற்கெல்லாம் எதற்கு விழா கொண்டாடுகிறீர்கள். 

அதுபோல முத்தம் கொடுப்பதற்கும் விழா நடுத்துகிறீர்கள். அதற்கு அடுத்தவர்களின் அனுமதியை ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ஏஎன்ஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"You want to eat beef, then eat. Why Festival? Similarly, a 'Kiss Festival', if you wish to kiss why do you need a festival or anyone's permission for it," Naidu said, while addressing a gathering at
Platinum Jubilee Celebrations of R.A. Poddar College of Commerce. (ANI)

முன்னதாக, ஐஐடி மெட்ராஸில் மாட்டிறைச்சி திருவிழா கடந்த ஜூலை 2017-ல் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல தான் சிறந்த அசைவ உணவு விரும்பி என்றும், தன்னை எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.