திருச்சி: அடுத்த முறை திருச்சியில் பொதுக் கட்டண கழிப்பறைக்குச் செல்லும் போது அங்கே ஏடிஎம் வசதி இருப்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம்.
கழிப்பறைக்குச் சென்றால் பணமும் எடுத்தும் வரலாம். இந்த புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள 17 பொதுக் கட்டண கழிப்பறையில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்தவும், விளம்பரப் பலகைகள் வைக்கவும் இட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் வசதிக்காக மட்டும் அல்ல.
அதாவது, திருச்சியில் உள்ள கட்டண கழிப்பறைகளை சிறந்த முறையில் பராமரிக்கத் தேவைப்படும் நிதியை ஈட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு அருகே ஏடிஎம் வசதியை ஏற்படுத்தி அதற்கான வாடகையைப் பெற்று, கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க செலவிடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் கழிப்பறைகளை மிகச் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என்று திருச்சி மாநகர ஆணையர் என். ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
திருச்சியில் உள்ள அண்ணா நகர் உழவர் சந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம்மை நேற்று திறந்து வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சியால், சுமார் 400 கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 17 கழிப்பறைகளில் ஏடிஎம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, அவை எஸ்பிஐ வங்கிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ஏழும், பொன்மலை மற்றும் கே. அபிஷேகபுரத்தில் தலா நான்கும், அரியமங்கலத்தில் இரண்டு கழிப்பறைகளும் இதற்காக தேர்வு செய்யப்பட்டுளள்ன.
இந்த 17 ஏடிஎம்களுக்கும் சேர்த்து எஸ்பிஐ வங்கி, திருச்சி மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.1.28 லட்சத்தை வாடகையாக செலுத்தும். இது ஆண்டுக்கு ரூ.15.35 லட்சமாக இருக்கும். மேலும், கட்டண கழிப்பறை அருகே விளம்பரப் பலகைகள் வைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7.46 லட்சம் வருவாயாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பெயர்தான் மாற்றி யோசிப்பதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


