மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆணையம் வெளியிட்ட ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்துக்கு காரணம் என்றும், இதேபோன்று கோவா மாநிலத்திலும் இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்:
கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட அணைகள், சாலைகள், குவாரிகள், சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் தொடர்பாக ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆணையம் ஆய்வறிக்கை வெளியிட்டு எச்சரித்திருந்தது. ஆனால் அவை எதையும் கேரள அரசு பின்பற்றவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ இல்லை.
இயற்கையின் இந்த சீற்றத்தின் காரணம் ஒட்டுமொத்த சமூகத்தையும் தான் சேரும். மக்கள் தங்களின் சொந்த உரிமைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. உள்நோக்கம் கொண்ட ஒரு சில சக்திகளின் பின்னணியில் தான் இந்த ஒட்டுமொத்த அரசாங்கத்தின் இயக்கமும் அமைந்துள்ளது. இந்த பேரழிவுக்கு அதுதான் முக்கிய காரணம்.
இது கேரளாவுக்கு மட்டும் கிடையாது. கோவா மாநிலத்தில் நடைபெற்று வரும் சுரங்க முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி ஷா தலைமையிலான ஆணையத்தின் ஆய்வறிக்கையும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதில், சுரங்கப் பணிகளில் அரசின் நடைமுறைகள் பின்பற்றப்படுவது தொடர்பான ஆய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த சுரங்க நடவடிக்கைகளால் பல்லுயிர் அமைப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதே நிலைத் தொடர்ந்தால் கோவா மாநிலத்தில் இதுவரையும், இனிவரும் காலங்களிலும் இயற்கைப் பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


