பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒரு கிலோ இனிப்புகளின் விலை ரூ 9000: எங்கு? ஏன் தெரியுமா?   

குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ஒரு கிலோ இனிப்பு ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:54 am

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ஒரு கிலோ இனிப்பு ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் '24 காரட் மித்தாய் மேஜிக்' என்னும் இனிப்புக் கடை ஒன்று உள்ளது. விரைவில் வர இருக்கும் 'ரக்ஷா பந்தன்' விழாவினை முன்னிட்டு  இந்தக் கடையில் புதிய  வகை இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு குறிப்பிட்ட வகை இனிப்புகள் மட்டும் கிலோ ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட வகை இனிப்புகள் மீது சுத்தமான தங்கம் இழைகளாக பூசப்பட்டுள்ளதுதான்.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் பிரின்ஸ் மித்தாய்வாலா கூறியதாவது:

இந்த வகை இனிப்புகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் வெள்ளி இழைகளுக்கு பதிலாக, தூய தங்க இழைகள் பயன்படுத்தப்படுகின்றது. அதனுடைய ஆரோக்கிய பயன்பாடுகளின் பொருட்டே தங்கம் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் ரக்ஷா பந்தன் வரவுள்ளதால் ஒரு சிலர் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'தங்க இனிப்புகள்' என்று அழைக்கப்படும் இவைதான் தற்பொழுதுக்கு அங்கு பேசுபொருள் ஆகியிருக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.