மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம்: அனைத்து மனுக்களும் தள்ளுபடி

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:39 pm

Raghavendran

சிபிஎஸ்இ அமைப்பால் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாளும், 10-ஆம் வகுப்பு கணித பாடத் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ அமைப்பின் புகாரின்பேரில், பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தில்லியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, பொருளாதாரப் பாடத்துக்கு வரும் 25-ஆம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ர நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டி மற்றும் நாகேஸ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போதிய அடிப்படை ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.