/

அம்பேத்கரின் பௌத்த மதகுரு 90 வயதில் மரணம்

அம்பேத்கருக்கு பௌத்த மதம் பயிற்றுவித்த மதகுரு 90 வயதில் வியாழக்கிழமை மரணமடைந்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:15 pm

Raghavendran


இந்தியாவின் அரசியலமைப்புச் சாசன வரைவு குழுவின் தலைவரும், முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கருக்கு பௌத்த மதம் பயிற்றுவித்த மதகுரு வியாழக்கிழமை மரணமடைந்தார்.

இலங்கையிலுள்ள பௌத்த விஹார் மந்திர் என்ற இடத்தில் இருந்து 1942-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தடைந்தவர் தான் இந்த பௌத்த மதகுரு ப்ரக்யானந்த். 

பின்னர் 1956-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி அம்பேத்கர், பௌத்த மதம் தழுவ காரணமாக இருந்தவர். இதையடுத்து அவருக்கு பௌத்த மதம் தொடர்பான அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர்.

அப்போது, அப்தேகருடன் இணைந்து மேலும் 7 பேரை தனது சீடர்களாக சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் பௌத்த மதம் குறித்து கற்றுக்கொடுத்தார்.

ப்ரக்யானந்தாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் மூச்சுத் திணறல் மற்றும் இதய வலி காரணமாக லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 90 ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.