/

முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்குக் கேள்வி

முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2017, 6:13 am


புது தில்லி: முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகளை முறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய அரசும், தேர்தல் அமைப்பும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.