/

முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்குக் கேள்வி

முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

PTI


புது தில்லி: முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகளை முறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய அரசும், தேர்தல் அமைப்பும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.