தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பரோலில் தப்பிய சிறைக் கைதி: 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம்!

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த பொழுது பரோலில் தப்பிய கைதி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது

News image
Updated On :20 ஜூலை 2017, 8:06 am

திருவனந்தபுரம்: கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த பொழுது பரோலில் தப்பிய கைதி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது

கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள மட்டஞ்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் நாசர். கொலை வழக்கு ஒன்றில் நான்கு நபர்களோடு குற்றம் சாட்டப்பட்ட இவர், 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாசருக்கு 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாதம் பரோல் கிடைத்தது. ஆனால் பரோல் காலம் முடிந்து சிறைக்கு திரும்பாமல் தப்பித்துச் செல்ல நாசர் திட்டமிட்டார்.

எனவே வளைகுடா நாடு ஒன்றுக்கு தப்பிச்சென்ற நாசர் அங்கே சிறு சிறு வேலைகள் செய்து வாழக்கை நடத்தியதாக கூறப்பகிறது. திருமணமே செய்து கொள்ளாத நாசர், கேன்சர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டு, ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளா திரும்பினார்.

சில சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நாசர் இனிமேலும் தனது குடும்பத்திற்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். இதனால் மீண்டும் சிறைக்கே சென்று விடுவது என்று அவர் தீர்மானித்தார். அதன்படி நேற்று மாலை பூஜப்புரா மத்திய சிறை சென்ற அவர் தான் யார் என்பதை தெரிவித்தார்.

முதலில் ஆச்சர்யத்துக்கு உள்ளான அதிகாரிகள், பின்னர் ஆவணங்களை சோதனை செய்த பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள சக கைதிகளுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.