நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புகைப்படம் எடுத்துக்கொள்ளவே  ஜி20 சென்றார் மோடி: காங்கிரஸ் சாடல்

புகைப்படம் எடுத்துக்கொள்ளவே ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:23 pm

Raghavendran

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி20 12-வது மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, புகைப்படங்களில் இடம்பெறுவதற்காகத்தான் ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டார். 

அங்கு நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பங்கேற்று சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நாகாலந்து தலைவர்களுடன் மோடியால் பேச முடிகிறது என்றால், ஏன் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச முடிவதில்லை.

பாஸ்டரில் பல காலமாக இருக்கும் நக்ஸல் பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முடிவதில்லை. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதை பதிவிடுவதற்காகவே மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்றார் என்று குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, அதிகாரப்பூர்வமற்ற ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நலம் விசாரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பகிரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.