அர்னாப் கோஸ்வாமி சார்பில் ஆஜரான அவரது தரப்பு வழக்குரைஞர், இனிமேல் அவ்வாறு செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படாது; இதுதொடர்பாக, அர்னாப் கோஸ்வாமிக்கு அறிவுறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதையும் மீறி, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தீய நோக்கத்துடனும், வேண்டுமென்றே தவறான செய்திகளை 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டாரா? என்பதை நீதிமன்றமே இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.