காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை: வெங்கய்ய நாயுடு

உத்தரப்பிரதேச அரசியல் நிலவரம் குறித்து கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகாவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஹைதராபாத்: உத்தரப்பிரதேச அரசியல் நிலவரம் குறித்து கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகாவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், உத்தரப்பிரதேச அரசியல் நிலவரத்துக்கு பாஜகவின் சதி காரணம் என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி அதன் உட்கட்சி பூசல் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக சிக்கலில் உள்ளது. அக்கட்சியின் தலைவராலேயே பிரச்னையை தீர்த்து வைக்க முடியாத நிலையில் உள்ளது.

அவர்களாலேயே அவர்களது பிரச்னையை தீர்க்க முடியாத நிலையில், இதற்கெல்லாம் காரணம் பாஜக என்று எங்களை குற்றம்சாட்டுகிறார்கள். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.