காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அமைச்சர்கள் செல்போன் எடுத்து வரக் கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அமைச்சர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI

புது தில்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அமைச்சர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே கசிந்து விடாமல் தடுக்கும் வகையில் மத்திய அமைச்சர்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அமைச்சரவை செயலாளர், அமைச்சர்களின் தனிச் செயலாளர்களுக்கு அனுப்பிய அறிவுறுத்தல் கடிதத்தில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்போர்,இனி ஸ்மார்ட்போன், செல்போன் போன்றவற்றை எடுத்து வரக் கூடாது என்றும், இது குறித்து தனிச் செயலாளர்கள், அந்தந்த அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்றதொரு அறிவுறுத்தல், மத்திய அரசிடம் இருந்து வந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, மத்திய அமைச்சர்கள் தங்களது செல்போன்களை கொண்டு வர அனுமதி வழங்கப்படும். ஆனால், அவற்றை சைலன்ட் மோடிலோ அல்லது ஸ்விட்ச் ஆப் செய்யவோ அறிவுறுத்தப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.