நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செப்டம்பருக்குள் ரூ.4 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்துவேன்: விஜய் மல்லையா உறுதி

இந்திய வங்கிகளிடம் தான் பெற்றுள்ள கடனில், ரூ.4 ஆயிரம் கோடியை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பி செலுத்திவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

புது தில்லி: இந்திய வங்கிகளிடம் தான் பெற்றுள்ள கடனில், ரூ.4 ஆயிரம் கோடியை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பி செலுத்திவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.

இந்திய வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல், இந்தியாவை விட்டு வெளியேறினார் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா.

இது குறித்து வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, விஜய் மல்லையாவின் வழக்குரைஞர் வைத்தியநாதன், நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், வங்கிகளிடம் பெற்றுள்ள கடனில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 4 ஆயிரம் கோடியை திரும்ப செலுத்துவதாக விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.

மேலும், ஜி.இ. நிறுவனத்துக்கு எதிராக தான் தொடர்ந்துள்ள வழக்கில் வெற்றி பெற்றால் மேலும் ரூ.2 ஆயிரம் கோடியையும் செப்டம்பருக்குள் செலுத்தத் தயார் என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கைக் குறித்து வங்கிகளின் தொழில் கூட்டமைப்பு இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.