வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சத்தீஸ்கர்: கண்ணி வெடியில் சிக்கி 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் சாவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.

தண்டேவாடா மாவட்டத்தின் மெலாவாடா என்ற கிராமம் வழியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) வாகனத்தில் இன்று மாலை சென்றனர். அப்போது, நக்ஸல்களால் ஏற்கெனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி மீது, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் ஏறியதாகத் தெரிகிறது. இதில் அந்த வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இச்சம்பவத்தில் அந்த வாகனத்தில் இருந்த 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீரர்கள் செல்லும் வழியை பயங்கரவாதிகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததால், கண்ணி வெடியை அங்கு புதைத்து வைத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே தாக்குதலுக்குள்ளான வாகனத்தில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை நக்ஸல்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.