பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சத்தீஸ்கர்: கண்ணி வெடியில் சிக்கி 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் சாவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.

Updated On :30 மார்ச் 2016, 2:18 pm

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.

தண்டேவாடா மாவட்டத்தின் மெலாவாடா என்ற கிராமம் வழியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) வாகனத்தில் இன்று மாலை சென்றனர். அப்போது, நக்ஸல்களால் ஏற்கெனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி மீது, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் ஏறியதாகத் தெரிகிறது. இதில் அந்த வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இச்சம்பவத்தில் அந்த வாகனத்தில் இருந்த 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீரர்கள் செல்லும் வழியை பயங்கரவாதிகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததால், கண்ணி வெடியை அங்கு புதைத்து வைத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே தாக்குதலுக்குள்ளான வாகனத்தில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை நக்ஸல்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.