2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உலகளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கான போட்டியில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா

டைம் இதழ் வெளியிட்ட உலக அளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் தேர்வுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

PTI

டைம் இதழ் வெளியிட்ட உலக அளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் தேர்வுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டைம் இதழ் "டைம் 100" என்ற உலக அளவில் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்ற பிரபலங்களின் பட்டியலை அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

இதனை முன்னிட்டு, மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள், சிறந்த சிந்தனையாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிறந்த பிரபலங்கள், கலை மற்றும் புகழ்பெற்ற சில நபர்கள் என 127 பேர் அடங்கிய பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

உலக மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் இன்னும் சக்தி வாய்ந்ததாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட 100 பேரின் பட்டியலில் மோடி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, மிர்சா பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவின் மிகச் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை, தனது தாய் நாட்டில் பல பெண் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரியங்கா சோப்ராவை பற்றி குறிப்பிடுகையில், பாலிவுட்டில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில், வெளிநாடு வாழ் இந்தியர்களான கூகுள் நிர்வாகி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிர்வாகி சத்யா நாடெல்லா ஆகியோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.