பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உலகளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கான போட்டியில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா

டைம் இதழ் வெளியிட்ட உலக அளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் தேர்வுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News image
Updated On :24 மார்ச் 2016, 7:39 am

டைம் இதழ் வெளியிட்ட உலக அளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் தேர்வுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டைம் இதழ் "டைம் 100" என்ற உலக அளவில் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்ற பிரபலங்களின் பட்டியலை அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

இதனை முன்னிட்டு, மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள், சிறந்த சிந்தனையாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிறந்த பிரபலங்கள், கலை மற்றும் புகழ்பெற்ற சில நபர்கள் என 127 பேர் அடங்கிய பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

உலக மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் இன்னும் சக்தி வாய்ந்ததாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட 100 பேரின் பட்டியலில் மோடி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, மிர்சா பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவின் மிகச் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை, தனது தாய் நாட்டில் பல பெண் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரியங்கா சோப்ராவை பற்றி குறிப்பிடுகையில், பாலிவுட்டில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில், வெளிநாடு வாழ் இந்தியர்களான கூகுள் நிர்வாகி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிர்வாகி சத்யா நாடெல்லா ஆகியோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.