பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பகத் சிங் நினைவு தினம்: பிரதமர் மோடி வீர வணக்கம்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.

News image
Updated On :23 மார்ச் 2016, 6:51 am

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.

பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் உயிர் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, மாவீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினமான இன்று பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் அவர்களின் இணையில்லா வீரம், நாட்டுப்பற்று மற்றும் இந்திய சுதந்திரத்துக்காக செய்த உயிர் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது வருங்கால தலைமுறையினர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக, இம்மூன்று இளைஞர்களும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்திருப்பது அவர்களது நாட்டுப்பற்றை பறைசாற்றுகிறது என்றும் மோடி கூறியுள்ளார்.

புகழ்பெற்ற தலைவர் லாலா லஜபதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற காரணத்துக்காக பிரட்டிஷ் அரசால், மூன்று இளைஞர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.