2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பதான்கோட்டில் பயங்கரவாதியை கொன்று வீர மரணடைந்த ஜெகதீஷுக்கு கீர்த்தி சக்ரா விருது

பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்று வீர மரணடைந்த ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:50 pm

PTI

பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்று வீர மரணடைந்த ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகதீஷ் சந்த் உள்பட 58 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று விருதுகளை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.

இதில் ஜெகதீஷ் சந்த் சார்பில் அவரது மனைவி விருதைப் பெற்றுக் கொண்டார். ஜெகதீஷின் பெயர் அறிவிக்கப்பட்டபோது பெரும் கரவொலி எழுப்பப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, வீரத்துடன் செயல்பட்டு பயங்கரவாதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்று, தனது உயிரைத் தியாகம் செய்தார் ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்த். அவருக்கு போர் அல்லாத காலத்தில் ராணுவத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான கீர்த்தி சக்ரா அளிக்கப்பட்டது.

இது தவிர கோர்கா ரைபிள் படையைச் சேர்ந்த கர்னல் எம்.என். ராய்க்கு மறைவுக்கு பிந்தைய விருதாக சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.